கந்தன் திருவடி சரணம்

கந்தன் திருவடி சரணம்

ஓம் சிவ சிவ ஓம் அவனின்றி ஓர் அணுவும் இல்லை

Breaking

திருத்துறை ஸ்ரீ சிஷ்டகுருநாதர் கோயில்

PM 4:00
திருத்துறை ஸ்ரீ சிஷ்டகுருநாதர் கோயில்

 முதியவராக வந்த சிவபெருமான்!


சுந்தரமூர்த்தி நாயனாருக்கு காட்சி சிவபெருமான் கொடுத்த திருத்துறை ஸ்ரீ சிஷ்டகுருநாதர் கோயில்



கடலூர் மாவட்டம், திருத்துறையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்


திருத்துறையூரில் 300 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலாக ஸ்ரீ சிஷ்ட குருநாதர் மற்றும் ஸ்ரீ சிவலோக நாயகி கோயில் அமைந்துள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தவ நெறி வேண்டிப் பெற்ற தலமாக இத்தலம் விளக்குகின்றது. திருவெண்ணைநல்லூரில் சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனார் காட்சி கொடுத்து, பித்தா என்று அடி எடுத்துத் தந்தார்.


பிறகு தன்னுடைய புகழை இவ்வுலகிற்குப் பரப்புவதற்கு ஆணையிட்டதையும் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனிடம் தவ நெறி வேண்டிய நிலையில் ஈசன் திருத்துறையூர் வா உனக்கு உபதேசம் செய்கின்றேன் என்று கூற சுந்தரமூர்த்தி நாயனாரோ இறைவனுடைய ஆணையின்படி திருத்துறையூர் நோக்கி வருகை தந்த சமயம் நாயனாரைச் சோதிக்க வேண்டிய இறைவன் மறைகிறார்.


இறைவனைக் காணாத நாயனார் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் பொழுது இறைவன் வயோதிக வடிவில் வந்து சுந்தரரைத் தடுத்து நிறுத்தி சுந்தரா எங்குச் செல்கின்றாய் என்று வினவ, இறைவனைத் தேடிச் செல்கின்றேன் என்று கூற உடனே அவர் திரும்பிப்பார் என்று சொல்லி மறைந்துவிட்டார்.


பிறகு கோபுரத்தில் ரிஷப ருடராக இறைவனும், இறைவியும் காட்சி அளித்தனர். நாயனார் தன் பாடலால் அவ்விடமே இறைவனைப் புகழ்கின்றார். இவ்வாலயம் நான்கு விதிகளுடன் மேற்கு நோக்கி விளங்குகின்றது. கோயிலுக்கு எதிரே தீர்த்த குலமும், கோயில் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அம்பாளின் சன்னதியும் வடக்கு நோக்கி காட்சி அளிப்பதைப் பார்க்கலாம்.


தென்மேற்கே உள்ள நர்த்தின விநாயகரை வழிபட்டு சுவாமியின் சன்னதியை அடையலாம். அர்த்தமண்டபம், மகா மண்டபம் திருப்பணியாகக் காட்சி தருகின்றது. அதனைத் தொடர்ந்து கொடிமரம், நந்தி, பலி பீடங்களும் காணப்படுகின்றன.


பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை தஞ்சபுரீஸ்வரர் கோயில்...!

அருள்மிகு சிஸ்டகுருநாதேஸ்வரர் நம்மில் உள்ளங்களைக் கவரும் பெருமையாகக் கருவறையில் காட்சியளிக்கின்றார். இக்கோயிலில் இராமனும், பீமனும் பூஜித்து அருள் பெற்ற சிவலிங்கம் காணப்படுகின்றது. கோயிலுக்கு எதிரே அருணந்தி சிவாச்சாரியாரின் முக்தி அடைந்த இடமும் உள்ளது. அருகில் இறைவன் தடுத்த இடத்தில் லிங்கத் திருமேனி வயோதிக வடிவில் வந்த இடமும், காயகற்பம் எனும் இடத்தில் ஒரு பெரிய லிங்க திருமேனியும் உள்ளது.


திருமணத் தடை, கல்வி சிறக்க, புத்திர பாக்கியம் கிட்டும் திருக்கோயிலாக இக்கோயில் அமைந்துள்ளது. பௌர்ணமி தினத்தன்று 16 முறை இவ்வாலயத்தின் மாட வீதியைப் பக்தர்கள் வலம் வருகின்றனர். மேலும் அமாவாசை, பிரதோஷம், சதுர்த்தி, அஷ்டமி, கந்தசஷ்டி, நவராத்திரி, குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, வைகாசி விசாகம், பிரம்மோற்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது.


பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை தஞ்சபுரீஸ்வரர் கோயில்...!

PM 2:25
பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை தஞ்சபுரீஸ்வரர் கோயில்...!

தஞ்சபுரீஸ்வரர் கோயில்

தஞ்சபுரீஸ்வரர் கோயில்


பிரம்மாவின் மானச புத்திரன் புலஸ்திய மகரிஷி. இவருடைய மைந்தன் விஸ்வாரஸ் என்பவரும் ஒரு ரிஷி. இவர் முனிவர் குலத்தில் பிறந்திருந்தாலும், கேகசி என்ற அரக்க குல மங்கையை மணந்து கொண்டார்.

இவர்களுக்கு முதலில் ராவணன், கும்பகர்ணன் என்ற மகன்களும், சூர்ப்பனகை என்ற மகளும் பிறந்தனர். பின்னர், விபீஷணனும், குபேரனும் மகன்களாகப் பிறந்தனர்.

ராவணனும், குபேரனும் தீவிர சிவ பக்தர்கள். விபீஷணன் விஷ்ணு பக்தன். கும்பகர்ணன் பிரம்மாவின் பக்தன். ராவணன் ஈசனிடம் தனக்கு மனிதரால் மட்டுமே மரணம் கிடைக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.

குபேரன் தன் தீவிர சிவ பக்தியால் பெரும் செல்வத்தையும் அரசையும் பெற்றான். அவனுடைய நகருக்கு அழகாபுரி என பெயர். 

அது, அளகை என்றும் அழைக்கப்பட்டது. தேவசிற்பி மயனால் மிக அழகான அரண்மனையும் அவனுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டது. சில காலத்தில் அவன் அண்ணன் ராவணன் அவன் அரசைப் பறித்துக் கொண்டு அவனை விரட்டிவிட்டான்.

செல்வத்தை இழந்து குபேரன் மீண்டும் தன் பதவியைப் பெறுவதற்காகப் பல சிவத்தலங்களுக்குச் சென்று தவமிருந்தான். 

அவன் கடைசியாக இந்த தலத்துக்கு வந்து சுயம்புவாக எழுந்தருளி இருந்த சிவபெருமானிடம், நீயே துணை! நான் உனது தஞ்சம்! என காலில் வீழ்ந்து கதறித் தவமிருந்தான்.

வரம் தரும் வரலட்சுமி விரதம்! பூஜை செய்ய சிறந்த நேரங்கள் மற்றும் பூஜை முறைகள்

AM 11:03
வரம் தரும் வரலட்சுமி விரதம்! பூஜை செய்ய சிறந்த நேரங்கள் மற்றும் பூஜை முறைகள்

 வளங்களையும், வரங்களையும் அள்ளித்தரும் வரலட்சுமியை மனதில் நினைத்து எடுக்கப்படும் வரலட்சுமி விரதம் (அல்லது) வரலட்சுமி நோம்பு எடுப்பதற்கு சிறந்த நேரம் மற்றும் பூஜை முறைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 



கன்னி பெண்கள் மற்றும் திருமணம் ஆன பெண்கள் என, அனைவரும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விரதங்களில் ஒன்று இந்த வரலட்சுமி விரதம். ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வரலட்சுமி விரதம் எடுக்கப்பட உள்ள நிலையில், இதனை எப்படி கடைபிடிப்பது, விரதம் எடுக்க உகர்ந்த நேரம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.


அம்மனை கொண்டாட கூடிய மாதங்களில் உயர்ந்த மாதம் ஆடி. அப்படி பட்ட ஆடி மாதத்தில் கொண்டாட கூடிய விரதம் வரலட்சுமி நோம்பு. ஆடி மாத அம்மாவாசை முடிந்ததும் வளர்பிறை துவங்கும். இந்த வளர்பிறையில் பவுர்ணமிக்கு முன்னதாக துவங்கும், வெள்ளிக்கிழமையில் வருவது தான் வரலட்சுமி விரதம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் எடுக்கப்பட உள்ளது. 


வெள்ளிக்கிழமைகளில் பொதுவாக... காலை 9:15 முதல் 10:15 வரையிலும், மாலை 4:45 முதல் 5:45 வரை நல்ல நேரமாக உள்ளது. எனவே இந்த நேரங்களில் வரலட்சுமி விரதம் எடுக்க சிறந்த நேரம் ஆகும். அப்படி இல்லை என்றால், வீட்டில் விளக்கேற்றும், அந்தி சாயும் நேரத்தில் விரதத்தை எடுப்பது சிறந்தது. எந்த வீட்டில் வரலட்சுமி விரதம் எடுக்கப்படுகிறதோ, அந்த வீட்டிற்கு மஹாலக்ஷ்மி வருவதாகவும், வாசம் செய்வாள் என்பதும் ஐதீகம்.


மஹாலக்ஷ்மி ஒரு வீட்டில் வாசெய்கிறாள் என்றால், அந்த வீட்டில் உள்ள கஷ்டங்களை போக்கி சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும், அனைத்து விதமான வளங்களையும் அள்ளித்தருவாள் என்கிறது புராணம். 


வரலட்சுமி விருத்தம் கடைபிடிக்க, முதல் நாளே... அதாவது வியாழ கிழமை அன்றே, வீட்டை சுத்தம் செய்து, சுவாமிக்கு தீபாரத்தை செய்ய கூடிய பாத்திரங்கள் மற்றும் சுவாமி படங்களை துடைத்து பொட்டு வைத்து தயார் படுத்திக்கொள்ளுங்கள். எந்த ஒரு விரதத்தையும் துவங்கும் முன்பு, விநாயக பெருமானை வாங்க வேண்டும். அதன் பின்னர் நன்கு சுத்தம் செய்த தாம்பாளத்தில் கீழ் கோலமிட்டு, அதன் மேல் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கலசத்தை வைக்கவும். அதன் பின்னர், பூஜைக்கு தேவையான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, போன்ற மங்கள பொருட்கள், பழங்கள், இனிப்பு, நெய்வேத்தியமாக தயார் செய்யப்பட்ட கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற அனைத்தையும் தயார் செய்து வைத்து கொண்டு.


முதலில் வெளியில், கற்பூரத்தை வெளிப்பகுதியில் காட்டி வாசலில் இருக்கும் மஹாலக்ஷ்மியை வீட்டிற்குள் அழைத்து செல்லுங்கள். பின்னர் கலசத்தின் பக்கத்தில் அமர்ந்து அம்மன் துதியை கூறி பூஜைகள் செய்யுங்கள். மனம் உருகி அழைத்தாள் வராமலா இருப்பாள் மஹாலட்சுமி. வருவது மட்டும் இன்றி நீங்கள் கேட்கும் வரங்களை அள்ளிக்கொடுப்பால். பிறகு வரலட்சுமியை வேண்டி நோம்பு கயிற்றை கும்பத்தின் மீது சாற்றி வேண்டிக்கொண்டு தீபாராதனை செய்யுங்கள். 


பின்னர் உங்கள் வீட்டில் மூத்த சுமங்கலிகள் இருந்தால் அவர்களுக்கு பிரசாதத்தை கொடுத்து இந்த விரதத்தை முடித்து, நோம்பு கயிற்றை கையில் கட்டி கொள்ளுங்கள். இந்த விரதத்தை திருமணம் ஆனவர்கள் எடுப்பதால் அவர்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னி பெண்கள் எடுத்தால் அவர்களுக்கு சிறந்த திருமண வாழ்க்கை அமையும்.


செல்வம் செழித்தோங்கவும், மாங்கல்ய பலம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.


ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். அந்த வகையில் ஆடி 20ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை (05.08.2022) இவ்விரதம் அனைத்து வயது பெண்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது. 


வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.


பூஜைக்கு வேண்டிய பொருட்கள் :

மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலுமிச்சைப்பழம், குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்துவிளக்கு, நோன்பு கயிறு, நகை மற்றும் பணம் வைத்தும் வழிபடலாம்.

வரலட்சுமி விரதம்


பூஜைசெய்யும்முறை :

ஒரு தாம்பூலத்தில் அரிசியை பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்திற்காக வைக்கலாம்.


அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியே நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டிற்குள் வருமாறு அழைக்க வேண்டும். 


மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் (தெய்வத்தை மனதில் எண்ணுதல்) செய்ய வேண்டும்.

மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அப்போது மங்கலபாயாசம கரமான மந்திரங்களை சொல்லவும். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களையும் பாடலாம்.

இதையடுத்து நோன்புக் கயிற்றை கும்பத்தில் சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லவும். மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நீங்கள் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீங்கள் தர வேண்டும் என்று மனம் உருகி வணங்க வேண்டும்.

பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நிவேதனம் :

பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன் மற்றும் கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

பலன்கள் :

வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், செல்வ வளம் உண்டாகும், மங்கல வாழ்க்கை 

பழனி முருகன் இரகசியம்

AM 12:00
பழனி முருகன் இரகசியம்

 பழனி முருகன் இரகசியம்


ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:


உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!  

இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலை


கார்த்திகை மாதம். ஐயப்ப பக்தர்கள் மாலை போடத் துவங்கி விடுவார்கள். ஐயப்பனைத் தரிசித்து விட்டு, அப்படியே, பிற ஆன்மீகத் தலங்களையும் தரிசிப்பது அவர்கள் வழக்கம். அப்படி, கூட்டம் கூட்டமாய் பழனிக்கும் வருவார்கள். இந்த சமயத்தில், பழனியில் உள்ள முருகன் சிலையின் அபூர்வ மகிமையைப் பற்றி, அவர்கள் தெரிந்து கொள்வதற்காக, தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இதோ….!

பழனி முருகன் இரகசியம்


அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு-ஆவினன்-குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.


போகர் சித்தர், தனது சீடர் புலிப்பாணி உட்பட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் இந்த நவபாஷண சிலை செய்யப் பட்டுள்ளது.


லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளைக் கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகத் தேடிய போது, அதற்கு பொருத்தமான இடம் இந்த பழனி மலை என்பதை தேர்வு செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.


நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சம்!


அந்த வியர்வை பெருக்கெடுக்கும். அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது. அதனால் தான், இங்கு தினந்தோறும் ராக்கால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம் பூசப்படும்.மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப் படும்.


மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்.


கீழே வைக்கப் பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப் படும். இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள்.  

இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம். இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அரு மருந்தாகக் கருதப்படுகிறது.


அதனால், இதைப் பிரசாதமாகப் பெறுவதற்காக, இந்த விபரம் தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கில், காலை 4 மணிக்கு கோவிலில் குவிந்து விடுவார்கள். கி.மு. 500- லிருந்தே இம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.


சங்க கால இலக்கியங்களில் பழனியைப் பற்றியும், பழனியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி. இப் பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார்.


இப் பகுதியில் ஆவியர்குடி என்னும் தனி இனக் குழுவினர் மிகுதியாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் எனப் பெயர் பெற்றுள்ளான்.


அதனால் ஆவி நாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப் பட்டிருக்கிறது. இன்றும் இந்த ஊரின் நடுவே உள்ள குளம், வையாபுரிக் குளம் என்றே அழைக்கப்படுகிறது.


தற்போது, மலை மீது காணப்படும் கோயில்; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் உள்ளது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கோயிலின் திருப்பணிகள் துவக்கப்  

பட்டதாகக் கூறப்படுகிறது.


கோயில் கருவரையின் வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.


கருவறைச் சுவர்களில் உள்ள நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சார்ந்தது (கி.பி. 1520). இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழனிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது.


மற்ற கல்வெட்டுகள் இங்குள்ள மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே சுட்டிக் காட்டுகின்றன.விஜயநகர மன்னர் மல்லிகார்ஜூனர் காலத்தில் (கி.பி. 1446), அவரது பிரதிநிதியாக அன்னமராய உடையார் என்பவர் இந்தப் பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார்.


அந்தக் காலத்தில் மூன்று சந்தி கால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக ரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப் பட்டிருக்கிறது.


இந்த ரவிமங்கலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது, அந்தக் கல்வெட்டு பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.


இந்தப் பழனி மலைக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஊருக்கு வட மேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது. பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டிலேயே ரோப் கார், மற்றும் வின்ச் எனப்படும் மலை இழுவை ரயிலும் பக்தர்களின் வசதிக்காக இங்கு மட்டும் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.


அறிவியல், விஞ்ஞானம் ஒரு புறம் வளர்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி ஆன்மீகமும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இங்கு வரும் பக்தர்களின் கூட்டமே சாட்சி!

ஈசன் திருவடியில் நம்மைச் சேர்க்கும் 276 தேவார திருத்தல நாமங்கள்

AM 4:00
ஈசன் திருவடியில் நம்மைச் சேர்க்கும்    276 தேவார திருத்தல நாமங்கள்

 திருச்சிற்றம்பலம்





1. திருவாரூர் 


2. திருவாரூர் அரநெறி 


3. திருவாரூர் 

  பரவையுண்மண்டலி 


4. திருக்கச்சி ஏகம்பம் 


5. திருக்கச்சிமேற்றளி 


6. திருக்கச்சி அனேக    

     தங்காவதம் 


7. திருஒணகாந்தன் தளி 


8. திருகச்சி நெறிக் காரைக்காடு


9. திருஆமாத்தூர் 


10. திருக்குரங்கணில் முட்டம் 


11. திருமாகறல் 


12. திருவோத்தூர் 


13. திருவன்பார்த்தான் பனங்காட்டூர்


14. திருவல்லம் 


15. திருமாற்பேறு 


16. திருஊறல் 


17. திருஇலம்பையங் கோட்டூர் 


18. திருவிற்கோலம் 


19. திருவாலங்காடு 


20. திருப்பாசூர் 


21. திருவெண்பாக்கம் 


22. திருக்கள்ளில் 


23. திருவொற்றியூர் 


24. திருவலிதாயம் 


25. வட திருமுல்லைவாயில் 


26. திருவேற்காடு 


27. திருமயிலாப்பூர் 


28. திருவான்மியூர் 


29. திருக்கச்சூர் 

 

30. திருஇடைச்சுரம் 


31. திருக்கழுக்குன்றம் 


32. திருஅச்சிறுப்பாக்கம்


33. திருவக்கரை 


34. திருக்கிளியனூர் 


35. திருஅரசிலி 


36. திருஇரும்பை மாகாளம் 


37. திருநெல்வாயில் அரத்துறை 


38. திருத்தூங்காணை மாடம் 


39. திருக்கூடலையாற்றூர் 


40. திருஎருக்கத்தம் புலியூர் 


41. திருத்தினைநகர்


42. திருச்சோபுரம் 


43. திருவதிகை


44. திருநாவலூர் 


45. திருமுதுகுன்றம் 


46. திருநெல்வெண்ணெய்


47. திருக்கோவிலூர் 


48. திருஅறையணி நல்லூர்


49. திருஇடையாறு 


50. திருவெண்ணெய்நல்லூர் 


51. திருத்துறையூர் 


52. திருவடுகூர்  


53. திருமாணிகுழி 


54. திருப்பாதிரிபுலியூர்


55. திருமுண்டீச்சுரம் 


56. திருப்புறவார் பனங்காட்டூர் 


57. திருபுக்கொளியூர் அவிநாசி 


58. திருமுருகன்பூண்டி 


59. திருநணா 


60. திருக்கொடிமாடச் செங்குன்றூர்


61. திருவெஞ்ச மாக்கூடல் 


62. திருப்பாண்டிக் கொடுமுடி 


63. திருக்கருவூர் ஆனிலை 


64. திருஆலவாய் 


65. திருஆப்பனூர் 


66. திருப்பரங்குன்றம் 


67. திருஏடகம் 

 

68. திருக்கொடுங்குன்றம் 


69. திருவானைக்காவல்


70. திருப்புத்தூர் 


71. திருப்புனவாயில் 


72. திருராமேச்சுரம்


73. திருவாடானை 


74. திருக்கானப்பேர் 


75. திருப்பூவணம் 


76. திருச்சுழியல் 


77. திருக்குற்றாலம் 


78. திருநெல்வேலி 


79. திருவாட்போக்கி 


80. திருக்கடம்பந்துறை 


81. திருப்பராய்துறை 


82. திருகற்குடி 

 

83. திருமுக்கீச்சுரம் 


84. திருச்சிராப்பள்ளி 


85. திருஎறும்பியூர் 


86. திருநெடுங்களம் 


87. திருமேலை திருக்காட்டுப்பள்ளி


88. திருஆலம்பொழில் 


89. திருப்பூந்துருத்தி 


90. திருக்கண்டியூர் 


91. திருச்சோற்றுத்துறை 


92. திருவேதிகுடி 


93. திருத் தென்குடித்திட்டை 


94. திருப்புள்ளமங்கை 


95. திருச்சக்கராப்பள்ளி 


96. திருக்கருக்காவூர் 


97. திருப்பாலைத்துறை 


98. திருநல்லூர் 


99. திருஆவூர் பசுபதீச்சுரம்


100. திருச்சத்திமுத்தம் 


101. திருப்பட்டீச்சுரம் 


102. திருபழையாறை வடதளி 


103. திருவலஞ்சுழி


104. திருக்குடமூக்கு 


105. திருக்குடந்தை கீழ்கோட்டம் 


106. திருக்குடந்தை காரோணம் 


107. திருநாகேச்சுரம்


108. திருவிடைமருதூர் 


109. திருத்தென்குரங்காடுதுறை 


110. திருநீலக்குடி 


111. திருநல்லம்

 

112. திருவைகல் மாடக்கோயில் 


113. திருக்கோழம்பம் 


114. திருஆவடுதுறை 


115. திருத்துருத்தி 


116. திருஅழுந்தூர் 


117. திருமயிலாடுதுறை 


118. திருவிளநகர் 


119. திருப்பறியலூர் 


120. திருச்செம்பொன்பள்ளி 


121. திருநனிப்பள்ளி 


122. திருவலம்புரம் 


123. திருதலைச்சங்காடு 


124. திருஆக்கூர் 


125. திருக்கடவூர் 


126. திருக்கடவூர் மயானம் 


127. திருவேட்டக்குடி 


128. திருத்தெளிச்சேரி 


129. திருத்தருமபுரம் 


130. திருநள்ளாறு 


131. திருக்கோட்டாறு 


132. திருஅம்பர் பெருந்திருக்கோயில் 


133. திருஅம்பர் மாகாளம்


134. திருமீயச்சூர் 


135. திருமீயச்சூர் இளங்கோயில் 


136. திருத்திலதைப்பதி 


137. திருசிறுகுடி 


138. திருவண்ணாமலை 


139. திருவீழிமிழலை 


140. திருவன்னியூர் 


141. திருக்கருவிலி 


142. திருப்பேணு பெருந்துறை


143. திருநறையூர் சித்தீச்சுரம்


144. திருஅரிசில் கரைப்புத்தூர் 


145. திருச்சிவபுரம்


146. திருக்கலய நல்லூர்


147. திருக்கருக்குடி 


148. திருவாஞ்சியம் 


149. திருநன்னிலம் 


150. திருக்கொண்டீச்சுரம் 


151. திருப்பனையூர் 


152. திருவிற்குடி 


153. திருப்புகலூர் 


154. திருப்புகலூர் வர்த்தமானேச்சுரம் 


155. திருஇராமனதீச்சுரம் 


156. திருப்பயற்றூர் 


157. திருச்செங்காட்டங்குடி 


158. திருமருகல் 


159. திருச்சாத்தமங்கை 


160. திருநாகைகாரோணம் 


161. திருச்சிக்கல் 


162. திருக்கீழ்வேளூர் 


163. திருத்தேவூர்


164. திருப்பள்ளியின் முக்கூடல் 


165. திருவிளமர் 


166. திருகரவீரம் 


167. திருபெருவேளூர் 


168. திருத்தலையங்காடு


169. திருக்குடவாயில் 


170. திருச்சேறை 

 

171. திருநாலூர் மயானம் 

 

172. திருக்கருவாய் கரைப் புத்தூர்


173. திருஇரும்பூளை 


174. திருஅரதைப் பெரும்பாழி 


175. திருஅவளிவநல்லூர் 


176. திருப்பரிதி நியமம்


177. திருவெண்ணி 


178. திருப்பூவனூர் 


179. திருப்பாதாளீச்சுரம் 


180. திருக்களர் 


181. திருச்சிற்றேமம் 


182. திருஉசாத்தானம் 


183. திருஇடும்பாவனம்


184. திருக்கடிக்குளம் 


185. திருத்தண்டலை நீள்நெறி 


186. திருக்கோட்டூர் 


187. திருவெண்டுறை 


188. திருக்கொள்ளம்பூதூர்


189. திருப்பேரெயில் 


190. திருக்கொள்ளிக்காடு 


191. திருத்தெங்கூர் 


192. திருநெல்லிக்கா 


193. திருப்பாம்புரம் 


194. திருநாட்டியத்தான்குடி 


195. திருக்கறாயில் 


196. திருக்கன்றாப்பூர் 


197. திருவலிவலம்


198. திருக்கைச்சினம் 


199. திருக்கோளிலி 


200. திருவாய்மூர் 


201. திருமறைக்காடு 


202. திருஅகத்தியான்பள்ளி 


203. திருவிடைவாய் 


204. திருஈங்கோய்மலை 


205. திருப்பாச்சிலாசிராமம்


206. திருப்பைஞ்ஞீலி 


207. திருக்காளத்தி 


208. திருக்கோடியக்கரை 


209. திருப்பாற்றுறை 


210. திருமாந்துறை 


211. திருஅன்பில் ஆலந்துறை


212. திருக்கானூர் 


213. திருப்பழூவூர் 


214. திருமழபாடி 


215. திருப்பெரும்புலியூர் 


216. திருநெய்த்தானம்


217. திருவையாறு 


218 . திருபழனம் 


219. திருக்குரங்காடுதுறை 


220. திருவைகாவூர்


221. திருவிசயமங்கை 


222. திருப்புறம்பயம் 


223. திருஇன்னம்பர்


224. திருக்கொட்டையூர் 


225. திருவியலூர் 


226. திருந்துதேவன்குடி 


227. திருசேய்ஞலூர் 


228. திருஆப்பாடி 


229. திருப்பனந்தாள் 


230. திருமங்கலக்குடி 


231. திருக்கோடிக்கா 


232. திருக்கஞ்சனூர் 


233. திருபந்தனை நல்லூர் 


234. திருக்கடம்பூர்


235. திருநாரையூர் 


236. திருக்கானாட்டு முள்ளூர்


237. திரு ஓமாம்புலியூர் 


238. திருபழமண்ணிப் படிக்கரை 


239. திருவாழ்கொளிப்புத்தூர் 


240. திருகுரக்குகா


241. திருக்கருப்பறியலூர்


242. திருக்குறுக்கை 


243. திருமணஞ்சேரி 


244. திருஎதிர்கொள் பாடி 


245. திருவேள்விக்குடி 


246. திருஅன்னியூர் 


247. திருநீடூர் 


248. திருபுன்கூர்


249. திருநின்றியூர் 


250. திருக்கடைமுடி 


251. திருக்கண்ணார் கோவில் 


252. திருப்புள்ளிருக்கு வேளூர் 


253. திருக்கோலக்கா 


254. திருசீர்காழி 


255. திருக்குருகாவூர் வெள்ளடை


256. திருக்கீழைத் திருக்காட்டுப்பள்ளி 


257. திருவெண்காடு 


258. திருப்பல்லவனீச்சரம் 


259. திருச்சாய்க்காடு 


260. திருக்கலிக்காமூர் 


261. தென்திருமுல்லைவாயில் 


262. திருமயேந்திரப்பள்ளி 


263. திருநல்லூர் பெருமணம் 


264. திருக்கழிப்பாலை 


265. திருநெல்வாயில்


266. திருவேட்களம் 


267. திரிகோணமலை 


268. திருக்கேதீச்சரம் 


269. திருக்கோகர்ணம் 


270. திருஅஞ்சைக் களம் 


271. திருப்பருப்பதம் 


272. திருஇந்திர நீலபருப்பதம்


273. திருஅனேக தங்காவதம் 


274. திருக்கேதாரம்


275. திருநொடித்தான் மலை 


276. திருத்தில்லை


திருச்சிற்றம்பலம்